Pages

Monday, 4 August 2014

பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியான (RBI) வங்கியில் பல்வேறு மாநிலங்களின் அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னைக்கு மட்டும் 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 506
பணி: உதவியாளர்
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
01 அகமதாபாத் - 10
02 பெங்களூர் - 37
03 போபால் - 37
04 புவனேஸ்வர் - 25
05 சண்டிகர் - 40
06 சென்னை - 30
07 குவஹாத்தி - 10
08 ஹைதெராபாத் - 36
09 ஜெய்ப்பூர் - 26
10: ஜம்மு - 10
11 கான்பூர் மற்றும் லக்னோவில் - 46
12 கொல்கத்தா - 30
13 மும்பை - 60
14 நாக்பூர் - 20
15 புது தில்லி - 20
16 பாட்னா - 39
17 திருவனந்தபுரம் & கொச்சி - 30

கல்வித்தகுதி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தன் சொந்த மாநில மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:  ஓபிசி மற்றும் பொது பிரிவினருக்கு 450. SC,ST,PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால
பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.08.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2855 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment