Pages

Friday, 5 September 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு பாதுகாப்பு படையில் பணி

சி.ஐ.எஸ்.எஃப் (சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ்) என அழைக்கப்படும் மத்திய அரசின் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்புப் படையின் பல்வேறு
பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பார்பர், வாஷர்மேன், ஸ்வீப்பர், குக், வாட்டர் கேரியர், பெயின்டர், எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு பணிகள் கான்ஸ்டபிள் பதவியின் கீழ் வருவன.
காலியிடங்கள்: 985
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற் கல்விகளில் சான்றிதழ் படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உடற்தகுதிகள்: உயரம்: 170 செ.மீட்டர், மார்பளவு - 80-85 செ.மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment