Pages

Sunday, 13 September 2015

கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

மேற்கு வங்க மாநிலம் கஞ்சரபராவில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வே பணிமனையில் (Kanchrapara Railway Workshop) தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். 01/2015-16/KPA
பயிற்சியின் பெயர்: Engagement of Act Apprentice
காலியிடங்கள்: 750
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், கார்பெண்டர், பெயிண்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகதே தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை கோடிட்ட IPO ஆக "FA & CAO, E.Rly, Kolkata" என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். SC,ST,PH மற்றும் பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Workshop Personnel Officer, Eastern Railway, Kanchrapara Railway Workshop, P.O. Kanchrapara, 24-Pargana (N), Pin - 743145.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment