Pages

Friday, 15 January 2016

ரயில்வே தேர்வாணையத்தில் 1884 குரூப் 'D' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1884
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 09.01.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2016 - 28.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment