மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான எல்லை காவல் படையில் காலியாக உள்ள 293 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (வொர்க்ஷாப்): 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 20- 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (மாஸ்டர்) - 10
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 22 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் மத்திய, மாநில உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் அல்லது மெர்க்கன்டைல் மரைன் துறையால் வழங்கப்படும்
செகண்ட் கிளாஸ் மாஸ்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (இன்ஜின் டிரைவர்) - 13
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 22 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் மத்திய, மாநில உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் அல்லது மெர்க்கன்டைல் மரைன் துறையால் வழங்கப்படும்
முதல் தர இன்ஜின் டிரைவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தலைமைக் காவலர் (மாஸ்டர்) - 68
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குழுத் தலைவர் (செரங்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தலைமைக் காவலர் (இன்ஜின் டிரைவர்) - 66
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் செகண்ட் கிளாஸ் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.