அரசு பொறியியல் கல்லூரிக்கு 139 உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் (ஜூலை) 18 ஆம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.