Showing posts with label dinamani education informations. Show all posts
Showing posts with label dinamani education informations. Show all posts

Saturday, 15 February 2014

இந்திய ரயில்வேயில் 26,567 பணியிடங்கள்(ஐடிஐ, டிப்ளமோ தகுதி) - விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014.

விளம்பர எண்:  Centralised Employment Notice No.01/2014
chennai railway recruitment 2014-2015
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 567 பணியிடங்களை நிரப்ப 21 ரெக்ருட்மென்ட் போர்டுகள் மூலம் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களும் ஒரே நாளில் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு ஆர்ஆர்பிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளிலும், பிராந்திய மொழிகளிலும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
சென்னை ஆர்ஆர்பியில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், பெங்களூர் ஆர்ஆர்பியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, கொங்கணி ஆகிய மொழிகளிலும், திருவனந்தபுரம் ஆர்ஆர்பியில் மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம்.
சென்னை ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்:
காலியிடங்கள்: 1666. (பொது- 782, எஸ்சி- 347, எஸ்டி- 275, ஒபிசி- 262,) இவற்றில் 160 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்:

பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்(Plus 2 tanittervarkal: apply in tatkal)

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் பிப். 17 முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
Plus 2 tanittervarkal: apply in tatkal
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வுத் துறையில் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, இப்போது விண்ணப்பிக்க விரும்புவோர் தத்கல் அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்குச் சென்று தனித்தேர்வர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேறு இடங்களில் இருந்து ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாது. இந்த சிறப்பு மையங்கள் தொடர்பான விவரத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மண்டலத் தேர்வு துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்