Showing posts with label puthiathalaimurai news collections. Show all posts
Showing posts with label puthiathalaimurai news collections. Show all posts

Friday, 19 July 2013

உலகம் அறிவோம்: நோபல் பரிசை ஏற்க மறுத்தவர்கள்..the Nobel Prize refuse personalities

jean paul sartre
உலகில் பட்டங்கள் பதவிகளை தேடி அலையும் மனிதர்களையும், பல்வேறு பட்டங்கள் பெற்ற மனிதர்களையும் பார்த்

திருப்போம். ஆனால் தேடி வந்த உலகின் உயரிய விருதையும் வேண்டாம் என்று மறுத்தவர்கள் வெகு சிலரே.
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரிய விருதை வாங்க மறுத்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான்.
1964 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் ஜீன் பால் சார்ட்ரேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
தான் எப்போதும் ஒரு எழுத்தாளனாக இருப்பதையே விரும்புவதாகவும், இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட விருதுகளால் நிலை மாறுவதை தான் ஒரு போதும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Kissinger-and-Le-Duc
கிழக்கு மற்றும் மேற்கத்திய சமூகத்தினரிடையே பிளவு ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு மேற்கத்திய அமைப்பு வழங்கக்கூடிய பரிசை தான் பெற விரும்பவில்லை என்றார் அந்த மார்க்சீயவாதி.
இதன் மூலம் உலக வரலாற்றில் நோபல் பரிசை மறுத்த முதல் நபரானார் சார்ட்ரே.
இதே போல் 1973 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வியட்நாம் விடுதலை இயக்கத் தலைவர் லே டக் தோவுக்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிசிஞ்சர்க்கும் பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Tuesday, 16 July 2013

The mystery of the Bermuda Triangle ...! பெர்முடா முக்கோணத்தின் மர்மம்…!

லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது பெர்முடா முக்கோணம். கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கும் இந்த முக்கோணைத்தின் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?!

மர்ம முக்கோணம் ! மரண முக்கோணம் ! பேய் முக்கோணம் என்று அச்சமூட்டம் பெயர்களில் அழைக்கப்படுவது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகா ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்தக் பகுதியில் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்தப் பகுதிக்கு மேலே பறக்கும் விமானங்கள் மர்மான முறையில் காணாமல் போய்விடுகின்றன. இங்கு இதுவரை 40 கப்பல்களும், 20 விமானங்களும் ஏராளமான சிறு கலன்களும் காணாமல் போயிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் ஏன் ? எப்படி? ஏற்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு கடலில் ஏற்படும் பயங்கர சூறாவளி, சுனாமி போன்று ஏற்படும் ராட்சத அலைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

Thursday, 11 July 2013

How flavored coffee is made ​​robot? - ரோபோ போட்ட காபி சுவை எப்படி இருக்கும்?

நீங்கள் சோர்வாக இருக்கும் நேரத்
தில் உங்களுக்காக ஒரு ரோபோ சுடச்சுட காபி போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும். இன்னும் 45 நாட்களில் இது சாத்தியமாக இருக்கிறது. ஆம் ! காபி போடக் கூடிய மனித வடிவிலான ரோபோக்களை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவின் பெயர் ராப்பிரோ (Rapiro).
இந்த ராப்பிரோ ரோபோ, ராஸ்ப்பெர்ரி பை (Raspberry Pi) என்ற லினக்ஸ் இயங்கு தளத்தை (Linux-based PC) கொண்டு இயங்கும் கணினியின் உதவியுடன் இயங்குகிறது.
காபி போடுது மட்டுமல்லாது, இந்த ராப்பிரோ, நாள்காட்டி-யை (calendars) நிர்வகிப்பதிலிருந்து துவங்கி, வெப்ப நிலை குறித்த தகவல்கள் வழங்குவது வரை, பல்வேறு வகையிலான செயல்பாடுகளை செய்யும் வகையில் புரோகிராம் செய்து கட்டுப்படுத்தலாம்.

Sunday, 7 July 2013

ரஷ்யாவை தாக்கிய விண்களுடைய துகள்கள் பாரிஸ் அருங்காட்சியத்திடம் ஒப்படைப்பு - Russia meteorite struck

ரஷ்யாவின் ஊரல் பகுதியில் ஷெல்யாபின்ஸ்க் என்ற இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி விண்கல் தாக்கியது. வின்னைப் பிளந்து கொண்டு சீறப் பாய்ந்த விண்கல் துகள்கள் பெரிய கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களை கிழித்துக் கொண்டு கொட்டியது. என்ன நிகழ்ந்தது என்ற அறியும் முன் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
ஒரு சில நிமிடங்களில் ரஷ்யாவில் வின்கல் தாக்கிய செய்தி உலகம் முழுவதும் பரவியது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வின்கல் தாக்குதல் என்பதால் உலகம் மொத்தத்தின் கவனமும் செல்யாபின்ஸ்க் பக்கம் திரும்பியது.

Friday, 7 June 2013

லாரிகளுக்கு புதிய அலுமினிய டிஸ்க் : டீசல் சிக்கனத்தால் லாபம்

கடந்த சில ஆண்டுகளாக வாகன உதிரிபாக விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என பல சிக்கல்களை சந்தித்து வந்த போக்குவரத்து தொழிலில், அதிக பாதிப்புகளை கண்டவர்களில் லாரி உரிமையாளர்களும் உண்டு. இப்போது அவர்களுக்கு, வரப்பிரசாதமாக வந்துள்ளது, புதிய அலுமினிய டிஸ்குகள். லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் இந்த டிஸ்குகள், லாரி தொழிலை எப்படி பாதிக்கின்றன.., அதோடு, இவற்றால் என்ன லாபம் என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களை பார்க்கலாம்.
செலவு கூடியதால், நசிவில் லாரி தொழில்:

Wednesday, 29 May 2013

பார்வையாளர்களை பரவசப்படுத்தும் படகுப் போட்டி

பார்வையாளர்களை பிரமிக்கச் செய்யும் பாய்மர படகுப் போட்டியின் தேசிய அளவிலான பந்தயம் சென்னை துறைமுகம் கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது
.
மூன்றாவது தேசிய அளவிலான டுவெண்டி நையனர் பாய்மரப் படகுப் போட்டியில், தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் 24 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவை 12 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடவர் மகளிர் என்ற பாகுபாடு இந்தப் போட்டியில் இல்லை.
போட்டி பற்றிய குறிப்புகள்
ஆழமான கடலில் சுழன்றடிக்கும் காற்றின் மத்தியில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டி மற்ற பந்தயங்களைப் போல் நடைபெறாது. பந்தயத்தில் பங்கேற்கும் படகை விரைவாகச் செலுத்த மோட்டார் உள்ளிட்ட எந்த கருவிகளும் படகில் கிடையாது. காற்று வீசும் திசைக்கு ஏற்ப படகை இயக்கும் போது சில நேரங்களில் படகு கவிழும் அபாயமும் உள்ளது.

தமிழக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களின் நிலை

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்ற பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமித்தது அரசு. தொகுப்பூதியமாக மாதத்திற்கு 5,000 ரூபாய் பெறும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோருகின்றனர். கடலூர் மாவட்டத்தில், பணி நியமனம் பெற்ற 690 சிறப்பு ஆசிரியர்களின் தற்போதைய நிலையையும், அவர்களது கோரிக்கைகளையும் பார்க்கலாம்.
சிறப்பு ஆசிரியர்கள் தவிப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பணி நியமனம் பெற்ற சிறப்பு ஆசிரியர்கள், மாதத்திற்கு 12 அரை நாட்கள் வேலை செய்து, 5,000 ரூபாயை தொகுப்பூதியமாக பெறுகின்றனர். கடந்த ஏப்ரலில் மூன்று வாரங்கள் மட்டுமே வேலை நாட்கள் என்பதால் 3,750 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறைக் காலமான இந்த மே மாதத்திற்கு அதுவும் கிடையாது என்பதால் சிறப்பு ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Tuesday, 21 May 2013

சவுதி அரேபியாவிலிருக்கும் இந்தியர்களுக்கு அவசர காலச் சான்றிதழ் வழங்கும் பணி


சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு அவசர காலச் சான்றிதழ் வழங்கும் பணியை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.
சவுதியிலிருந்து, 60,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ள நிலையில் இதன் முதல் கட்டமாக, 15,000 சான்றிதழ்களை மட்டும் சரிபார்த்து ஒப்புதல் தரும் பணியை இந்திய தூதரகம் மேற்கொள்கிறது.
அடுத்தகட்ட சரிபார்ப்புகள் குறித்த கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, நிதாகத் என்ற பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி,

Friday, 10 May 2013

782 சிறப்பாசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2013


அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி, ஓவியம், இசை மற்றும் தையல் சிறப்பாசிரியர்கள் 782 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 440 உடற்பயிற்சி சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓவிய ஆசிரியர்களில் 196 பணியிடங்களும், தையல் பிரிவுக்கு 137 பணியிடங்களும், இசை ஆசிரியர்கள் 9 பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.