ஸ்ரீரங்கம் தொகுதியில் காகித அட்டை தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன்கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து லாபகரமாகவும், பல விருதுகளை பெற்றுள்ளதுமான தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் காகிதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.