Showing posts with label SSC. Show all posts
Showing posts with label SSC. Show all posts

Monday, 23 November 2015

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை.
காலியிடங்கள்: 122
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 4 September 2015

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 7129 காவலர் பணியிடங்கள்

ஜார்க்கண்ட் மாநில காவல் துறையில் காலியாக உள்ள 7129 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜார்க்கண்ட் மாநில பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: போலீஸ் கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: 6279
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: ஆயுதப்படை காவலர்கள்
காலியிடங்கள்: 580
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வே
ண்டும்.
வயதுவரம்பு: 20 -25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50. இதனை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.jssc.in/Broucher%20of%20police%20Constable.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 28 August 2015

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு

தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், மத்திய அரசு துறைகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவுக்கு அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளயிட்டுள்ளது எஸ்எஸ்சி. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographer (Grade 'C & D')
தேர்வு: Stenographer (Grade 'C & D') Examination -2015
காலியிடங்கள் விவரம்:
1. Stenographer (Grade 'C ')  - 50
2. Stenographer (Grade ' D') - 1014
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100, 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து மற்றும்
கணினியில் தட்டச்சு செய்வதற்கான தகுதி தேர்வில் பெற்றதற்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
எழுத்து தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி.
எழுத்துத் தேர்வில் தவறான பதில்கள் மதிப்பெண் குறைப்பு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர், அனைத்து பிரிவுகளை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.09.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 4 August 2015

டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1000 இளநிலை பொறியாளர் (குரூப் பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 1000
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.
தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in அல்லது http://ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி I - 07.08.2015, பகுதி II - 10.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://vacancycollection.nic.in/ssc/notice/examnotice/final_Notice_JE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

Monday, 18 May 2015

ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு: எஸ்.எஸ்.சி அறிவிப்பு

2015 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விளம்பர எண்: F.No.3/12/2015-P and P-I
தேதி: 02.05.2015
பணி: குரூப் "பி"
தேர்வுக் கோடு: CGL 2015
1. Assistant
2 . Inspector of Income Tax
3 . Inspector
4 . Asst.Enforcement Officer
5 . Sub-Inspector
6 . Inspector of Posts
7 . Divisional Accountant
8. Statistical Investigator
9 .Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800
பணி: குரூப் "சி"
10. Auditor
11. Accountant
12. UDC
13. Tax Assistant
14. Compiler
15. Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssconline.nic.in/tpform1.php?exam_code=CGL&year=2015&notice_no=F.No.3/12/2015-P%20and%20P-I&notice_date=02-05-2015 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 26 October 2014

மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி வடக்கு மண்டலம் அறிவிப்பு

மத்திய அரசு துறைகளின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வடக்கு மண்டல பிரிவு (SSCNR).
விளம்பரம் எண் NR/3/2014
மொத்த காலியிடங்கள்: 30
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Speech Therapist - 03
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Research Assistant - 02
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Evaluator - 01
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Security Assistant - 01
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Senior Library and Information Assistant - 05
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Security Supervisor - 02
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Zoo-Ranger - 02
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800

Saturday, 30 August 2014

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கொல்கத்தா சணல் மேம்பாட்டு இயக்குனரகத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 01.09.14 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் கிராமப் பொருளாதாரம், செடி வளர்ப்பு, மரபு வழி பண்பியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கொல்கத்தா விலங்குகள் பாதுகாப்புத் துறையில் தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர்
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்