Showing posts with label டிஎன்பிஎஸ்சி குரூப்-IV: பொதுத்தமிழுக்கான விடை. Show all posts
Showing posts with label டிஎன்பிஎஸ்சி குரூப்-IV: பொதுத்தமிழுக்கான விடை. Show all posts

Tuesday, 23 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-IV: பொதுத்தமிழுக்கான விடை

21.12.2014 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-IV தேர்வின் பொதுதமிழ் பகுதி வினாவுக்கான விடைகள் பின்வருமாறு.
1. 'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
விடை: C கண்களால் நகுபவள்

2. பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக
a) குறிஞ்சி - கிழங்ககழ்தல்
b)முல்லை - வரகு விதைத்தல்
c) மருதம் - நெல்லரிதல்
d) நெய்தல் - உப்பு விற்றல்
விடை: A  2 4 1 3

3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
விடை: A பண்புத் தொகை

4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
விடை: B  தூது

5. பொருத்துக:
a) வினைத்தொகை - செய்தொழில்
b) உவமைத் தொகை - மதிமுகம்
C) உம்மைத் தொகை - நாலிரண்டு
d) அந்மொழித் தொகை - பவள வாய் பேசினாள்
விடை: D  2 4 1 3

6. "அவன் உழவன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
விடை: B குறிப்பு வினைமுற்று

7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
விடை: C  வயலில் மாடுகள் மேய்ந்தன

8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
விடை: A  பொருட்பெயர்

9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுந ாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகை தொடர்?
விடை: B அயற்கூற்று

10. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க.
விடை:  C  அண்ணன்

11. யாப்பு என்றால் ----------------- என்பது பொருள்
விடை:  C கட்டுதல்

12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
விடை: C  இராணி மங்கம்மாள்

13. "உலகின் எட்டாவது அதிசயம்" எனப் பாராட்டப்படுபவர்
விடை: C கெலன் கெல்லர்

14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
விடை: A  7

15.  தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
விடை: A  குறிஞ்சிப் பாட்டு

16. "மனித நாகரிகத்தின் தொட்டில்" என அழைக்கப்படுவது எது?
விடை: B  இலெமூரியா

17. குமரகுருபரர் எழுதாத நூல்
விடை: C திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: C இராமநாதபுரம்

19. தமிழகத்தின் "வேர்ட்ஸ்வொர்த்" என்று புகழப்படுபவர்
விடை: A  வாணிதாசன்

20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் -------------- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
விடை:  A குளோரோஃபுளுரோ கார்பன்

21. "திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
விடை:  B  குமரிலபட்டர்

22. " சீர்திருத்தக் காப்பியம்" என்று பாராட்டப்படுவது
விடை: B  மணிமேகலை

23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
விடை:  B  பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி

24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
விடை: D  மணிமேகலை

25. பொருத்துக:
a) நான்மணிமாலை - சிற்றிலக்கியம்
b) மலரும் மாலையும் - கவிதை
c) நான்மணிக்கடிகை - நீதிநூல்
d) தேம்பாவணி - காப்பியம்
விடை:  A  2 1 4 3

26.  "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - யார் கூற்று?
விடை: B  பாரதிதாசன்

27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
விடை: B   இராஜநாகம்

28. மணிமேகலையில் விருச்சக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
விடை: D  காயசண்டிகை

29. "தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்னும் புகழ்மிக்க நகரம்
விடை: A  மதுரை

30. "சதம்" என்பது -------------- பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
விடை: B   நூறு

31. "கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.."
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
விடை: D   சொல்லின் செல்வன்

32. "சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" எனக் கூறியவர்? -
விடை: B விவேகானந்தர்

33. "சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்" - இவ்வடியைப் பாடியவர்
விடை: B  பாரதிதாசன்

34. பொருத்தமான விடையை எழுதுக: "துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்" -
விடை: B  இராமச்சந்திர கவிராயர்

35. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" - என்று கூறியவர்
விடை:  B  பொன்முடியார்
36. அழுது அடியடைந்த அன்பர்-------------------
விடை: A  மாணிக்கவாசகர்

37. மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த "ஞானசாகரம்" இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
விடை: B  அறிவுக் கடல்

38. "ஜல்லிக்கட்டு" என்னும் எருதாட்டத்தை வைத்து "வாடிவாசல்" எனும் நாவலை எழுதியவர் ---------
விடை: A சி.சு. செல்லப்பா

39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
விடை:  C   இலக்கணம்

40. "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் மெச்சத் தகுந்தவர்
விடை: A  யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்

41. "முத்தொள்ளாயிரம்" - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
விடை: A.  சேர, சோழ, பாண்டியர்

42. பொருத்துக:
a) சிக்கனம்  - சுரதா
b) மனிதநேயம்  - ஆலந்தூர் கோ. மோகநரங்கம்
C) காடு - வாணிதாசன்
d) வேலைகளல்ல வேள்விகளே - கவிஞர் தரா பாரதி
விடை: C  3  2  4  1

43. "மணிமேகலை வெண்பா"வின் ஆசிரியர் யார்?
விடை: B பாரதிதாசன்

44. 1942-ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான "பர்மா வழி நடைப்பயணம்" நூலின் ஆசிரியர்
விடை: B  வெ. சாமிநாத சர்மா

45.  "ஆனந்தத்தேன் நூலின் ஆசிரியர்
விடை: D  க. சச்சிதானந்தன்

46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
a) விடுதலைக்கவி - பாரதியார்
b) திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
c) கவிஞரேறு - வாணிதாசன்
d) கவிக்கோ  - அப்துல் ரகுமான்
விடை: C  3  4  2  1

47. பொருத்துக:
a)  பூங்கொடி - முடியரசன்
b)  கொடி முல்லை - வாணிதாசன்
c)  ஆட்டனத்தி ஆதிமந்தி - கண்ணதாசன்
d)  பட்டத்தரசி - சுரதா
விடை: C  3  4  1  2

48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ---------
விடை: C  குலசேகராழ்வார்

49. "பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் ிடம் பெற்ற நூல்
விடை:  B  சிலப்பதிகாரம்

50.  திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளிட்டவர்
விடை:  B மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்