நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணியில் சேருவதற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (Central Board of Secondary Education) 'நெட்' தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'நெட்' தகுதி தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு சார்பாக சிபிஎஸ்இ முதல் முறையாக நடத்துகிறது.
'நெட்' தேர்வானது 2 பிரிவுகளை கொண்டதாகும். அதாவது Junior Research Fellowship மற்றும் Eligibility for Lectureship என்பதாகும். இதில் JRF ஐ தேர்ந்தெடுத்து நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கும், உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும் தகுதி பெறுவார்கள்.
கல்வித்தகுதி: யுஜிசியால் (பல்கலைக்கழக மானியக்குழு) குறிப்பிடப்பட்ட முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அந்தப் படிப்பை படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஹியூமானிட்டீஸ், (மொழிகள் உட்பட) சமூக அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக் சயின்ஸ் உள்ளிட்ட 95 துறைகளில் முதுகலை பட்டப்படிப்பில் அல்லது அதற்கு இணையான படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு 50 சதவிகித தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் (பி.எச்டி) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு (Junior Research Fellowship) 28 வயதிற்குள்ளும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைந்தவர்கள், பெண்கள் போன்ற பிரிவினருக்கு 5 வருடங்கள் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.