Showing posts with label the Nobel Prize refuse personalities. Show all posts
Showing posts with label the Nobel Prize refuse personalities. Show all posts

Wednesday, 9 October 2013

மைக்கேல் லெவிட், மார்டின் கர்பிளஸ், அரீ வார்ஷெலுக்கு வேதியியலுக்கான நோபல்

ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் லெவிட், மார்டின் கர்பிளஸ் மற்றும் அரீவார்ஷெல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. 2013ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் மருத்துவத்திற்கான நோபல் பரிசும், இரண்டாவது நாள் இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு அமெரிக்காவில் உள்ள

Friday, 19 July 2013

உலகம் அறிவோம்: நோபல் பரிசை ஏற்க மறுத்தவர்கள்..the Nobel Prize refuse personalities

jean paul sartre
உலகில் பட்டங்கள் பதவிகளை தேடி அலையும் மனிதர்களையும், பல்வேறு பட்டங்கள் பெற்ற மனிதர்களையும் பார்த்

திருப்போம். ஆனால் தேடி வந்த உலகின் உயரிய விருதையும் வேண்டாம் என்று மறுத்தவர்கள் வெகு சிலரே.
உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரிய விருதை வாங்க மறுத்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான்.
1964 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் ஜீன் பால் சார்ட்ரேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
தான் எப்போதும் ஒரு எழுத்தாளனாக இருப்பதையே விரும்புவதாகவும், இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட விருதுகளால் நிலை மாறுவதை தான் ஒரு போதும் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Kissinger-and-Le-Duc
கிழக்கு மற்றும் மேற்கத்திய சமூகத்தினரிடையே பிளவு ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு மேற்கத்திய அமைப்பு வழங்கக்கூடிய பரிசை தான் பெற விரும்பவில்லை என்றார் அந்த மார்க்சீயவாதி.
இதன் மூலம் உலக வரலாற்றில் நோபல் பரிசை மறுத்த முதல் நபரானார் சார்ட்ரே.
இதே போல் 1973 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வியட்நாம் விடுதலை இயக்கத் தலைவர் லே டக் தோவுக்கும், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிசிஞ்சர்க்கும் பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.