Tuesday 15 July 2014

139 உதவி பேராசிரியர் பணி காலியிடங்கள்: எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

அரசு பொறியியல் கல்லூரிக்கு 139 உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவுள்ளன.  இந்த காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம்  26 ஆம் தேதி நடைபெறும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம். இது  குறித்த கூடுதல் விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் (ஜூலை) 18 ஆம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment