Friday 4 September 2015

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 7129 காவலர் பணியிடங்கள்

ஜார்க்கண்ட் மாநில காவல் துறையில் காலியாக உள்ள 7129 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜார்க்கண்ட் மாநில பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: போலீஸ் கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: 6279
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: ஆயுதப்படை காவலர்கள்
காலியிடங்கள்: 580
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வே
ண்டும்.
வயதுவரம்பு: 20 -25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50. இதனை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.jssc.in/Broucher%20of%20police%20Constable.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment