Friday 10 May 2013

782 சிறப்பாசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 2013


அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி, ஓவியம், இசை மற்றும் தையல் சிறப்பாசிரியர்கள் 782 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 440 உடற்பயிற்சி சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓவிய ஆசிரியர்களில் 196 பணியிடங்களும், தையல் பிரிவுக்கு 137 பணியிடங்களும், இசை ஆசிரியர்கள் 9 பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பணியாற்ற உள்ளனர், இந்த சிறப்பாசிரிகள் மாநில வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடைப்படையில் 1-க்கு 5 என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்டுவார்கள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment