Thursday 18 February 2016

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏஎஸ்ஐ பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) காலியாக உள்ள  229 ஏ.எஸ்.ஐ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கில சுருக்கெழுத்து முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Sub Inspector (Stenographer)
காலியிடங்கள்: 229
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
வயது வரம்பு: 01.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
டெக்னிக்கல் தகுதி: சுருக்கெழுத்தில் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகள் எழுதி அதனை கணினியில் ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும் அல்லது இந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதி: ஆண்கள் 165 செ.மீட்டர் உயரமும், சாதாரண நிலையில் 77 செ.மீட்டர் மார்பளவும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும், உயரத்திற்கேற்ற எடை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016

No comments:

Post a Comment