Wednesday 8 January 2014

இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் - India's multi-purpose projects

* ஒரு திட்டங்களின் மூலம் பல நோக்கங்களை சென்றடைவதே பல்நோக்குத் திட்டங்கள் ஆகும். இவை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களே ஆகும்.
 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் - India's multi-purpose projects
* ஒரு ஆற்றுப்பகுதி முழுவதும் ஒரு திட்டத்திற்குரிய பரப்பாகவே கருதப்படுகின்றன. இத்திட்டங்கள் நீர்ப்பாசனம், நீர் வளம், வெள்ளத் தடுப்பு, தொழில் வளம், மண் அரிப்பு தடுப்பு, காடு வளர்ப்பு, மீன் பிடிப்பு, மின் சக்தி் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.
* ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்று புகழப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களின் முதல் பல்நோக்குத் திட்டமாக
அமைக்கப்பட்ட திட்டம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும். இவை வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் திட்டமாகும்.
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்
* சோட்டா நாகபுரி பகுதியிலிருந்து மேற்கு வங்காளம் வரை பாய்ந்து வருகிறது தாமோதர் நதி.
* தாமோதர் நதி கோடைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கச் செய்து வருகின்றன.

* இதனால் தாமோதர் ஆறு இந்தியாவின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது.
* 1948ல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் துவங்கப்பட்டது.
* இக்கழகம் சுமார் ரூ.150 கோடியில் திலாயா, கோனார்.பாஞ்சத், மைதான் ஆகிய நான்கு இடங்களில் அணைகளைக் கட்டியுள்ளது.
* மேலும் தாமோதர் பள்ளத்தாக்கில் காணப்படும் இரும்பு மற்றும் நிலக்கரி வளத்தையும் பயன்படுத்த ஆலோசித்து வருகின்றன.
* இத்திட்டத்தின் உதவியால் ஜாம்ஷெட்பூர், துர்க்காப்பூர், குல்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும் மிகுந்த  பயன் பெற்றி வருகின்றன.
* இத்திட்டத்தின் பயனை பீகார் (ஜார்க்கண்ட்) மற்றும் மேற்கு வங்காளம் இரு மாநிலங்களும் பெற்று வருகின்றன. மேலும் மத்தியப்பிரதேசமும் இதன் பயனை பங்கிட்டுக்கொள்கின்றன.
ஹிராகுட் திட்டம்
* இத்திட்டம் மகாநதியின் மீது 1948-ல் தொடங்கப்பட்டு 1957-ல் முடிவடைந்தது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.83 கோடி.
* இத்திட்டத்தின் கீழ் மகாநதியின் மாது ஒரிசாவில் ஒரு நீண்ட அணை கட்டப்பட்டது. அதாவது 4.8 கிமீ நீளமும், 61 மீட்டர் உயரமும் உடைய இந்த அணைக்கட்டுதான்  உலகின் மிக நீண்ட அணைக்கட்டு ஆகும்.
* இந்த அணை சுமார் 810 கோடி கியூபிக் மீட்டர் நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. இத்திட்டத்தின் கீழ் 9 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு 270 மெகாவாட் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
* திக்காரா மற்றும் நாராஜ் ஆகிய அணைகள் இத்திட்டத்தின் கீழ் அமைந்துள்ளன. வெள்ளத் தடுப்பு, ஒரிசாவின் இயற்கை வளப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டமாகும்.
துங்கபத்ரா திட்டம்
* துங்கபத்ரா நதி, துங்க் மற்றும் பத்ரா ஆகிய இரு ஆறுகளின் இமைப்பாகும்.
* ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.
* கர்நாடகாவில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 2.5 கிமீ நீளமும், 50 மீ உயரமும் உடையது. இங்கிருந்து சுமார் 225 கிமீ நீளத்திற்கு ஒரு கால்வாயும், 350 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு கால்வாயும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தின் கீழ் 14 மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு 126 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பக்ரா நங்கல் திட்டம்
* இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்குத் திட்டம் பக்ரா நங்கல் திட்டம் ஆகும். சிந்துவின் துணையாறாகிய சட்லஜ் ஆற்றின் குறுக்கே பக்ரா என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தினால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகின்றன. இத்திட்டம் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
* சட்லஜ் ஆற்றின் குறுக்கே, பக்ரா என்னும் இடத்தில் 226 மீட்டர் உயரத்துடன், 518 மீட்டர் நீளத்துடனும் அணை கட்டப்பட்டுள்ளது. பக்ரா உலகின் உயரமான அணை ஆகும்.
* இந்த அணையால் உருவான மனிதனால் கட்டப்பட்ட, 8 மீட்டர் அகலமும், 80 கிமீ நீளமும் கொண்ட மிகப்பெரிய செயற்கை ஏரிக்கு, சீக்கியர்களின் 10-வது குருவான, குரு கோவிந்த் சிங் என்பவரின் நினைவாக கோவிந்த் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
* பக்ரா அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதுவும் சட்லஜ் ஆற்றின் மீதே அமைந்துள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.
* சட்லஜ் ஆற்றின் மீது பக்ரா நங்கல் அணைக்குக் கீழாக 13 கிமீ தொலைவில் நங்கல் என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து நங்கல் நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.
* பக்ராவில் 2 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு, அவற்றின் மூலம் 210 மெகாவாட் நீர் மின்சக்தி பெறப்படுகிறது. மேலும் நங்கல் கால்வாய்த் திட்டத்திலும் 2 மின்சக்தி நிலையங்கள் உள்ளன.
* 64 கிமீ நீளமுடைய நங்கல் கால்வாய் நங்கல் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக இத்திட்டதினால் 1204 மெகாவாட் மின்சக்தி கிடைக்கிறது. அத்துடன் 1100 கிமீ நீளத்திற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்தினால் 15 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.
கோதி திட்டம்
* பீகாரில் உள்ள கோசி நதியின் மீது நேபாளத்தின் உதவியுடன் கோசி திட்டம் அமைக்கப்பட்டது. வெள்ளத் தடுப்பே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
* கோசி ஆறு பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் முக்கிய கால்வாய் ஹனுமான் நகர் தடுப்பு வரை செல்கிறது.
* கோசி திட்டத்தால் பயன் பெறும் மாநிலம் பீகார் மற்றும் நேபாளம்.
* இதே போன்று இந்தியாவும், நேபாளமும் இணைந்து செயல்படுத்தி உள்ள மற்றொரு திட்டம் கண்டக் திட்டமாகும்.
நாகார்ஜூனா திட்டம்
* ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதி மீது அமைந்துள்ள திட்டமாகும். புத்த துறவியாகிய நாகார்ஜூனரை நினைவுப்படுத்தும் பொருட்டு நாகார்ஜூன சாகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தின் கீழ், ஆந்திரப்பிரதேசத்தின் நாள்கொண்டா மாவட்டத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.5 கீமி உயரம் 25 மீட்டர் ஆகும்.
* இத்திட்டத்தின் மூலம் 50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இரு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம்
* மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியே இத்திட்டமாகும்.
* யமுனையின் தெற்கு கிளை நதியே சாம்பல்.
* இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சம்பல் பகுதியின் மண் பாதுகாப்பே ஆகும்.
* இத்திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் அணையும், இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நீர்த் தடுப்பு மற்றும் ஜவகர் சாகர் அணை, இராணா பிரதாப் சாகர் ஆகிய மூன்று அணைகள் அமைந்துள்ளன.
* இத்திட்டத்தினால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு நீர்ப்பாசனம் பெற்று வருகிறது.
ரீகண்ட் திட்டம்
* சோன் நதியின் கிளை நதியான ரீகண்ட் ஆற்றின் குறுக்கே இத்திட்டம் அமைந்துள்ளன. இந்த அணையின் நீர்த்தேக்கம் கோவிந்த் வல்லப பந்த் சாகர் என்று அழைக்கப்படுகிறது.
* இந்த அணை 90 மீ உயரமும், 1020 மீ நீளமும் கொண்டது.
* இத்திட்டம் நீர்மின்சக்தியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
* உத்திரப்பிரதேசத்தின் 7 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இத்திட்டத்தினால் நீர்ப்பாசனம் பெற்று வருகிறது. 6 அலகுகளின் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* இத்திட்டத்தின் மூலம் பிம்பிரி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளும், ரேணுகுட் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலையும், ஊரசர பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலையும் மின் ஆற்றல் பெறுகின்றன.
இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம்
* இராஜஸ்தானின் மாநிலத்தின் முக்கிய திட்டமாகும் இந்த திட்டம்.
* பியாஸ் நதியின் மீது போங் அணை கட்டப்பட்டுள்ளது. பியாஸ் மற்றும் இராவி நதிகளில் உள்ள நீரை சட்லஜ் ஆற்றிற்கு திசை திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
* கால்வாய்களி்ன் மூலம் நீரை திசை திருப்பப்படுகிறது. போங் அணையும் நீரை திசை திருப்புகிறது.
* இராஜஸ்தான் கால்வாய் அல்லது இந்திரகாந்தி கால்வாய் என்று அழைக்கப்படும் இக்கால்வாய்தான் உலகின் மிக நீளமான நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும்.
* இராஜஸ்தான் மாநிலத்தின் காந்தி நகர், பிக்கானீர், ஜெய்சல்மீர் போன்ற பகுதிகளை வளப்படுத்துகிறது.
* இக்கால்வாயின் உதவியால் பியாஸ், இராவி மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை முழுமையாக இந்தியா பயன்படுத்த முடிகிறது.
* ரஷ்யா, கனடா, சைர், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா ஐந்தாவது இடத்தில் உலகளவில் நீர்மின்சக்தித் துறையில் இடம் பெற்றுள்ளது.
* நமது நாட்டின் நீர்மின்சக்தி வளத்தில் 30 சதவீதம் பிரம்மபுத்திரா பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பல திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஷராவதி திட்டம்
* இவை ஜோக் நீர்வீழ்ச்சியில் கர்நாடாகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஷராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
* இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும். 891 மெகாவாட் உற்பத்தியுடன், பெங்களூர் பகுதியை வளப்படுத்துகிறது.
* கலினாடி திட்டம் மூலம் 270 மெகாவாட் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.
* ஷராவதி திட்டம் மகாத்மா காந்தி நீர்மின்சக்தித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
குந்தா திட்டம்
* தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் குந்தா திட்டத்தின் மூலம் 425 மெகாவாட் திறனிலிருந்து 535 மெகாவாட் உற்பத்திக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment