Tuesday 16 June 2015

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் விமானப் பணியாளர் பணியில் சேர திருமணமாகாத இந்திய இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன்பின்பு 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அதன் பின்னர் காலியிடங்கள் ஏற்படுவதை பொறுத்து மீண்டும் பணியில் அமர்த்தப்படலாம்.
பணி: Cabin Crew
பிராந்தியம் வாரியான காலியிடங்கள் விவரம்:
வடக்கு பிராந்தியம் (தில்லி) - 35
கிழக்கு பிராந்தியம் (கொல்கத்தா) - 09
தென் பிராந்தியம் (பெங்களூர்) - 13, ஹைதராபாத் - 13
மேற்கு பிராந்தியம் (மும்பை) - 13
மொத்த காலியிடங்களில் ஆண்களுக்கு 50 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 18.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யை நேர்முகத் தேர்வின்போ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment