Friday 6 December 2013

plus 2 exam time table 2013

தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 3–ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26–ந்தேதியும் தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாட்டில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
19¾ லட்சம் பேர்
பிளஸ்–2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் 2 ஆயிரத்து 50 மையங்களில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 50 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 10 ஆயிரம் மாணவ–மாணவிகளும் எழுதுகிறார்கள்.


இந்த இரு தேர்வுகளிலும் சேர்த்து 19 லட்சத்து 85 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வமான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபிதா அறிவித்துள்ளார்.
இதன்படி பிளஸ்–2 தேர்வுகள் மார்ச் மாதம் 3–ந்தேதி தொடங்கி 25–ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் மாதம் 26–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடைபெறும்.
பிளஸ்–2 அட்டவணை
பிளஸ்–2 தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:–
2014–ம் ஆண்டு மார்ச் 3–ந்தேதி–தமிழ் முதல்தாள்
5–ந்தேதி–தமிழ் இரண்டாம் தாள்
6–ந்தேதி–ஆங்கிலம் முதல் தாள்
7–ந்தேதி–ஆங்கிலம் இரண்டாம் தாள்
10–ந்தேதி–இயற்பியல், பொருளாதாரம்.
13–ந்தேதி–வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
14–ந்தேதி–கணிதம், விலங்கியல், நுண்உயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.
17–ந்தேதி–வேதியியல், கணக்கு பதிவியல்.
20–ந்தேதி–உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.
24–ந்தேதி–அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.
25–ந்தேதி–கம்யூனிகேட்டிவ் இங்கிலிஸ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்.
எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:–
மார்ச் 26–ந்தேதி–தமிழ் முதல் தாள்.
27–ந்தேதி–தமிழ் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1–ந்தேதி–ஆங்கிலம் முதல் தாள்.
2–ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்.
4–ந்தேதி–கணிதம்.
7–ந்தேதி–அறிவியல்.
9–ந்தேதி–சமூக அறிவியல்.
தேர்வு தொடங்கும் நேரம்
பிளஸ்–2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 1.15 மணிக்கு முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணிக்கு முடிவடையும்.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபிதா அறிவித்துள்ளார்.
வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால் இந்த வருடம் 9.15 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகள் மாணவ–மாணவிகளின் புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாளில் இடம் பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் மாணவ–மாணவிகளின் பதிவு எண்களும் அந்த விடைத்தாளில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment