Monday 10 August 2015

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி  சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்  அளிக்கப்படுகிறது. பயிற்சியின் மொத்த காலம் 100 மணி நேரம் ஆகும்.
தங்கத்தை பற்றிய அடிப்படை அறிவு, விலை கணக்கிடும் முறை, தங்கத்தை அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகை அறியும் முறை, நகை செய்தல்,  ஹால்மா ர்க்கிங், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம்  மற்றும் விதிகள் போன்ற பாடங்களை உள்ளடக்கிய செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதில் தேர்வு எழுதி தேர்ச்சி அடைபவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த சான்றிதழ் பெற்றவர்கள் தேசிய, வணிக, கூட்டுறவு  மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டா ளாராக பணியாற்றவும், நகை அடகு கடை, ஆபரண கடை, நகை வணிகம் செய்யவும் நல்ல வாய்ப்பு உள்ளது.
இப்பயிற்சியில் சேர எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், இளங்கலை, முதுகலை பயின்று வருபவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்புகள் ஆக 9-ம் தேதி முதல் தொடங்க உள்ளதால் இதில் சேர விரும்புவோர்  திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை அலுவலகத்திற்கு வந்து பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய  பயிற்சி கட்டணம் செலுத்தி சேரலாம்.
பயிற்சி குறித்த விபரங்களுக்கு திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை  04366-227233 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது  8220767261 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment