Wednesday 26 August 2015

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர்லைன் அட்டன்டென்ட் பணி

 கோழிக்கோடு, மங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் ஏர்லைன் அட்டன்டென்ட் ஆக மூன்று வருட ஒப்பந்தகால அடிப்படையில் பணிபுரிய ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Airline Attendants
காலியிடங்கள்: 193
வயதுவரம்பு: 02.09.2015 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹாட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மொழித்திறன்: ஆங்கிலம், இந்தி மற்றும் மேலும் ஒரு இந்திய மொழியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். மலையாளத்தில் சரளமாக பேசும் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "AIR INDIA CHARTERS LIMITED"  என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். டி.டி.யை குழு விவாதத்தின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்கள் Group Dynamics Test, Personality Assessment Test,  Personnel Interview மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindiaexpress.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2015
மேலும் உடல் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.airindiaexpress.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment