Sunday 27 April 2014

முன்னாள் இராணுவத்தினனருக்கு ரிசர்வ் வங்கியில் காவலர் பணி

பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்பட்டு வரும் ரிசர்வ் வங்கியின் கிளைகளில் Security Guard-ஆக பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னாள் இராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
பணி: Security Guard
காலியிடங்கள்: 11
சம்பளம்: ரூ.6,350 - 13,750
வயது: 01.01.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தகுதியுடன் 15 வருடம் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் பட்டதாரிகளாக கருதப்படுவர்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை தேர்வு முறையின் விரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2014

No comments:

Post a Comment