Wednesday 11 February 2015

தமிழக அரசில் துணை வேளாண் அலுவலர் பணி

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 417 துணை வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 417
பணி: Assistant Agricultural Officer (துணை வேளாண் அலுவலர்)
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் வேளாண் துறையில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு: இரண்டு தாள் கொண்டது.
முதல் தாளில்: வேளாண்மை பட்டயம் தரத்தில் 200 வினாக்கள் கொண்டது. 300 மதிப்பெண்கள் கொண்டது.
இரண்டாம் தாளில்: General Studies (HSC தரத்தில்) 100 வினாக்கள், 200 வினாக்கள் கொண்டது.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ. 2800.
தேர்வு கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.150.
2. இட ஓதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்லவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2015
தாள் - I: காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
தாள் - II: மாலை 2:30 மணி முதல் - 04:30 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/1_2015_not_eng_asst_agrl_Officer.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment