Tuesday 10 February 2015

விமான நிலையங்களில் இளநிலை அதிகாரி பணி

இந்திய விமானநிலையங்களில் காலியாக உள்ள 450 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் எக்சிக்யூக்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்)
காலியிடங்கள்: 200
தகுதி: இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் எக்சிக்யூக்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்)
காலியிடங்கள்: 250
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பாடத்துடன் கூடிய எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 3% - 40,500 + இதர சலுகைகள்.
வயது வரம்பு: 10.02.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. கட்டணத்தை அதற்குரிய செலானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டியினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் படிவத்தின் பகுதி - 1ஐ நிரப்புவதற்கான கடைசி தேதி: 10.02.2015.
பகுதி - 2ஐ நிரப்புவதற்கான கடைசி தேதி: 18.02.2015.
பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.02.2015.

No comments:

Post a Comment