Saturday 21 February 2015

நீராவி மின்சாரக்கழகத்தில் அதிகாரி பணி

ஹரியானாவில் செயல்பட்டு வரும் நீராவி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பொறியாளர் மற்றும் டிரெய்னி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி பொறியாளர் மற்றும் டிரெய்னி ஆபீஸர் எனும் இரண்டு அடிப்படைப் பிரிவுகளில் பலதரப்பட்ட பணிகள்.
மொத்த காலியிடங்கள்: 110 
1. டிரெய்னி பொறியாளர் - 56
2. டிரெய்னி ஆபீஸர் பிரிவின் பைனான்ஸ் பிரிவில் - 20, மற்ற பிரிவுகளில் 34 பணியிடங்கள்.

கல்வித் தகுதி: எம்.இ., எம்.டெக்., சி.ஏ., எம்.ஏ., பி.எஸ்.சி., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., பி.எஸ்.சி., பி.ஜி டிப்ளமா முடித்தவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment