Sunday 29 June 2014

தேசிய அலுமினிய தொழிற்சாலையில் பொறியாளர் பணி

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் தேசிய அலுமினிய தொழிற்சாலையில் (நால்கோ) காலியாக உள்ள 125 பொறியாளர் பணியிடங்களுக்கு பி.இ. முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் பொறியாளர் டிரெய்னீஸ்
காலியிடங்கள்: 125
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 30.6.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். SC,ST,OBC மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், புரொடக்சன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், பவர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், டெலிகாம், எலக்ட்ரிக்கல், மெட்டாலர்ஜிக்கல், சிவில், ஆர்க்கிடெக்சர், செராமிக்ஸ் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், கெமிக்கல், அப்ளைடு கெமிஸ்ட்டிரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ போன்ற துறைகளில் ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
குறிப்பு: மேற்காணும் பொறியியல் பாடப் பிரிவுகளில் கேட் - 2014 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்டபொறியியல் பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014.

No comments:

Post a Comment