Sunday 8 June 2014

விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணி

எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் அனைத்தும் விளையாட்டு வீரர்களுக்கானது.
பணி: கான்ஸ்டபிள் (ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையிலானது) இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 40. இதில் ஆண்களுக்கு 32 இடங்களும், பெண்களுக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுத் துறையில் சாதித்து சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆண்களுக்கு அத்லட்டிக், ஆர்ச்சரி, பாக்சிங், ஜூடோ, பளு தூக்குதல், மல்யுத்தம் என பல்வேறு விளையாட்டுத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அத்லட்டிக், ஆர்ச்சரி, ஜூடோ, பளு தூக்குதல் எனும் நான்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2014
விண்ணப்பிக்கும் முறை: www.bsf.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, உடற்தகுதிகள், விண்ணப்பக் கட்டணங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment