Tuesday 27 May 2014

சிந்துதுர்க் ஆட்சியர் அலுவலகத்தில் கிளார்க் பணி

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Clerk-Typist மற்றும் Talathi போன்ற 71 பணியிடங்களை நிரப்புவதற்கான மகாராஷ்டிரா மாநிலம் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 71
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Clerk-Typist - 51
02. Talathi - 20
வயது வரம்பு: 16.05.2014 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
01. Clerk-Typist பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், மராத்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
02. Talathi பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / திரையிடல் சோதனை, ஆங்கிலம் தட்டச்சு தேர்வு, சோதனை, Viva-voce மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.200.
சம்பளம் :
01. Clerk-Typist பணிக்கு மாதம் ரூ 5200 . 20,200 + தர ஊதியம் ரூ.1900
02. Talathi பணிக்கு மாதம் ரூ. 5200 . 20,200 + தர ஊதியம் ரூ.2400.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.sindhudurg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2014
எழுத்தர் தட்டச்சர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2014 அன்று காலை 11 முதல் 12.30 வரை.
Talathi பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014 காலை 11 மணி முதல் 12.30 மணி வரை.
மேலும் விண்ணப்பதார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.sindhudurg.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment