Saturday 10 January 2015

தில்லி மெட்ரோ ரயில்வேயில் 189 அதிகாரி பணி

தில்லி மெட்ரோ ரயில்வேயில் (டி.எம்.ஆர்.சி) காலியாக உள்ள 189 எக்ஸிகியூட்டிவ், நான்-எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்ஸிகியூட்டிவ், நான்-எக்ஸிகியூட்டிவ்
காலியிடங்கள்: 189. இதில் 97 ஜூனியர் பொறியாளர் பணியிடங்களும், 28 உதவி புரோகிராமர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.
தகுதி: அசிஸ்டென்ட் புரோகிராமர் பணிக்கு பி.சி.ஏ., பி.எஸ்.சி (ஐடி, கணிதம்) முடித்திருக்கவேண்டும். பொறியாளர் பணியிடங்களுக்கு சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், தனிநபர் நேர்காணல், மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.400. எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150.
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 12.01.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள், விரிவான தகுதிகள் மற்றும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய   www.delhimetrorail.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment