Friday 16 January 2015

பாதுகாப்புத் துறையில் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய அரசின் பாதுகாப்பு துறைகளான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 375
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: I. National Defence Academy - 320
1. Army - 208
2. Navy - 42
3. Air Force - 70
II. Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55
வயது வரம்பு: 02.07.1996 - 01.07.1999 தேதிக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100 எஸ்பிஐ அல்லது அதன் துணை வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம். SC,ST பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை: உளவியல் திறனறியும் தேர்வு மற்றும் நுண்ணறிவு சோதனை, சிறப்பு தேர்வு குழுவின் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:   www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/exams/notifications/2015/NDA_I_2015/NDA-1%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment