Thursday 8 January 2015

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்டம், பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள 7 சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்கள் இன சுழற்சி
முறையில் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பங்களை உரிய கல்வித் தகுதி சான்றிதழின் நகல் மற்றும் இன சுழற்சிக்குரிய சான்றின் நகல்களுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முகவரிக்கு ஜன. 20-ம் பிற்பகல் 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 1.7.2014ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும், பொது போட்டி (பொது), ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை- ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் - பொது, 
பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) பொது, ஆதிதிராவிடர் - பொது ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை பெற்றவர்கள் மற்றும்
பொது போட்டி (ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (ஆதரவற்ற விதவை பெண்கள்) ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை அற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment