Friday 23 January 2015

பத்தாம் வகுப்பு தகுதிக்கு விமானப்படையில் பணி

இந்திய விமானப்படையில் "ஈஸ்டர்ன் கமாண்ட்" எனும் கிழக்குப் பிரிவின் தலைமைக் கிளையில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க், குக், மெஸ் ஸ்டாஃப், சஃபைவாலா போன்ற 85 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 85
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பணிகளுக்கேற்ப பத்தாவது, +2, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment