Sunday 11 January 2015

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பதவியில் காலியாக உள்ள 100 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 30.11.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.12.1984க்குப் பின்னரும் 30.11.1993க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்களும், ஆராய்ச்சி படிப்பு அல்லது சி.ஏ., ஏ.சி.எஸ்., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., முதுகலை மேலாண்மைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல் கட்ட ஆன்லைன் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் தேர்வு, புள்ளியியல், நிதி மற்றும் மேலாண்மை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nabard.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment