Thursday 9 October 2014

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரயில்டெல் கழகத்தில் சூப்பர்வைசர் பணி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RailTel Corporation of India நிறுவனத்தில் நடைபெறவுள்ள National Optic Fiber Network திட்ட பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RCIL/2014/P&A/44/37 (i) WR
பணி: Field Supervisor
காலியிடங்கள்: 50
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி கால அளவு: 2 வருடங்கள் அல்லது திட்டப்பணி முடியும்வரை நீட்டிக்கப்படலாம்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 மற்றும்இதர படிகள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. SC/ST பிரிவினருக்கு ரூ.100. இதனை RailTel Corporation of India Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணியில் சேரும் முன்பு மருத்துவ தகுதித் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: SR.Manager(P&A), RailTel Corporation Of India, Building No.143, Sector-44, Gurgaon-122003.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment