Tuesday 14 October 2014

என்எல்சி நிறுவனத்தில் டிரெய்னி (நிதி) பணிக்கு நேர்முகத் தேர்வு

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிறுவனத்தில் 40 தொழிலக பயிற்சியாளர்கள் (நிதி) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகின்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLCP)
மொத்த காலியிடங்கள்: 40
பணி: Industrial Trainee (Finance)
தொகுப்பூதியம்: மாதம் Rs.10000
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC, ST, OBC பிரிவினருக்கு வயது தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி மற்றும் அனுபவம் விவரம்: இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன இடைநிலை தேர்வில் தேர்ச்சி (ICAI) பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர் 15, 2014
இடம்: Neyveli Housde, 135 Periyar EVR High Road, Kilpauk, Chennai – 10
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment