Monday 17 November 2014

பிளஸ் 2 தகுதிக்கு இந்திய ராணுவத்தில் பணி

இந்திய ராணுவத்தில் 10 + 2 'Technical Entry Scheme' திட்டத்தின் 33வது கோர்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் இன்ஜினியரிங் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியும் விருப்பமுள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிப்பிரிவு: 10 + 2 'Technical Entry SchemeCourse 33'
காலியிடங்கள்: 90
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய துறையில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 16 - 19க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.01.1996க்கு முன்பு அல்லது 01.01.1999க்கு பின்பு பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதற்கட்ட தேர்வான எழுத்துத்தேர்வு பெங்களூரு, போபால், அலகாபாத் ஆகிய நகரங்களில் மொத்தம் 5 நாட்கள் நடைபெறும்.
இரண்டாம் கட்டத் தேர்வான குழு தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு 2015 பிப்ரவரி, மார்ச்சில் மாதங்களில் நடைபெறும் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
மொத்த பயிற்சி காலம்: 5 வருடம். ஒரு வருடம் அடிப்படையில் ராணுவ பயிற்சி கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அளிக்கப்படும். அதன்பின்னர் 4 ஆண்டுகள் பூனா, மோவ், செகந்திராபாத் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டு பி.இ பட்டம் வழங்கப்படும்.
ஊக்கத்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.21,000 வழங்கப்படும். பயிற்சியை முடித்த பின்னர் லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2014.
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment