Wednesday 26 November 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு அரசு பணி

தில்லியில் செயல்பட்டு வரும் டி.எஸ்.எஸ்.எஸ்.பி எனும் தில்லி துணை நிலை சேவை பணியாளர் தேர்வு வாரியத்தின் தில்லி அரசு துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டையர் 1 எனும் முதல்நிலை பணி
காலியிடங்கள்: 101
தகுதி: வேளாண்மை, உயிரியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், கணிதம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிப் பாடங்களில் முதுகலை படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி: 29.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.delhigovt.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment