Thursday 27 November 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு தில்லியில் அரசு பணி

தில்லியில் செயல்பட்டு வரும் டிஎஸ்எஸ்எஸ்பி எனும் தில்லி துணைநிலை சேவை பணியாளர் தேர்வு வாரியம் தில்லி அரசு துறையில் காலியாக உள்ள டையர் என்னும் முதல்நிலை பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டையர் 1 எனும் முதல்நிலை
காலியிடங்கள்: 101
தகுதி: வேளாண்மை, உயிரியல், வேதியியல், வணிகவியல், பெீருளாதாரம், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மொழிப்பாடங்களான ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதம் போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.delhigovt.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment