Monday 10 November 2014

இளநிலை அறிக்கையாளர் பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை அணுகலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையில் இளநிலை அறிக்கையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரரகாவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்ட காவல் துறையில் இளநிலை அறிக்கையாளர் பணியிடங்கள் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 தகுதிகள் : கல்வித் தகுதிகள் 10-ம் வகுப்பு மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 2014 ஜூலை 1-ம் தேதி அன்றைய தேதியின்படி (அதிகபட்ச வயது) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 35 வயது, பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 32 வயது மற்றும் இதர வகுப்பினர்களுக்கு 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
 உரிய தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்கள் பதிவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை நவம்பர் 14-ம் தேதிக்குள் நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள கொள்ளவும்.
 நேரில் வர இயலாதவர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை கல்விச் சான்றுகள் ஆகியவற்றின் நகல்களுடன் அஞ்சல் மூலம் அனுப்பிடலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment