Tuesday 23 December 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆய்வாளர் மற்றும் புரோகிராமர் பணி

ராஜஸ்தான் அரசின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் மற்றும் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம், அஜ்மீர் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 37
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Analyst-cum-Programmer (Deputy Director) (IT & Communications Department)- 29
தகுதி: தகவல் தொழில்நுட்ப அல்லது கணினி அறிவியல் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
2. Vidhi Rachanakar (Law & Legal Affairs Department)- 08
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 350. SC, ST பிரிவினருக்கு ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: www.rpsc.rajasthan.gov.in அல்லது rpsconline.rajasthan.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rpsc.rajasthan.gov.in/pdf_reports_files/Detail_Advt_ACP_Vidhi_Rachanakar_01_12_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment