Thursday 25 December 2014

இந்தியன் ஆயில் கழகத்தில் மார்க்கெட்டிங் அதிகாரி பணி

இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் எரிசக்தியை சப்ளை செய்யும் இந்திய ஆயில் கழகத்தின் மார்க்கெட்டிங் மற்றும் மனிதவளத் துறையில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
தகுதி: மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் பாடத்தை சிறப்பு பாடமாக எடுத்து பிசினஸ் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் 2 வருட முழு நேர ரெகுலர் கோர்சில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: மனிதவள மேலாண்மை துறை
தகுதி: மனிதவளம் பாடத்தில் 2 வருட ரெகுலர் முழுநேர டிப்ளமோ முதுகலை பட்டம், பெர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ட்ஸ்ட்ரியல் ரிலேசன்ஸ், சமூக நலம் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் யுஜிசி - நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: யுஜிசி நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் குழுப்பணி, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014.

No comments:

Post a Comment