Wednesday 17 December 2014

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை-2 பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்ய தகுதியானவர்கள் வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென தனியாக விண்ணப்ப படிவம் கிடையாது.வெள்ளைத் தாளில் எழுதி அனுப்ப வேண்டும். அத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் நகலினை சுயசான்றொப்பம் செய்து 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவு, ஆட்சியர் அலுவலம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதியாக ஐ.டி.ஐ. சிவில், டிராப்ட்மேன்சிப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment