Saturday 2 August 2014

கடற்படையில் பொறியாளர் பணி

இந்திய கடற்படையில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ், டெக்னிகல், சப்மரைன் டெக்னிக்கல் என்னும் பிரிவுகளில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எக்ஸிகியூட்டிவ், டெக்னிக்கல் பணியிடங்களுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சப்மரைன் டெக்னிக்கல் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், மரைன், ஏரோநாட்டிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், ஆட்டோமேசன், ஏவியானிக்ஸ், மெட்டலர்ஜி போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்செய்யப்படும் முறை: ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2 எனும் முறைகளில் தேர்வுகள் அமைந்திருக்கும். இதில் தேர்வாகிறவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டு பின்பு பணியாமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, உடற்தகுதி போன்ற விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு www.nausenabharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment