Saturday 30 August 2014

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக குன்னூரிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் முன்னுரிமை வகுப்பினரை சேர்ந்த பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பிப்போரின் வயது 32 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கல்வித்தகுதியாக 10ம்வகுப்பு தேர்ச்சியும், தொழிற்நுட்ப கல்வித்தகுதியாக கம்மியர் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 இத்தகைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், குன்னூர்-1, நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு செப்டம்பர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 0423-2231759 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment