Monday 15 September 2014

அறிவியல் உதவியாளர் பணி: செப் 18-இல் நேர்காணல்

தடய அறிவியல் துறையில் காலியாகவுள்ள அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 18-ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தடய அறிவியல் துறையில் அறிவியல் உதவியாளர் நிலை-2-ல், 33 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத் தேர்வு முடிவுகள் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 847 பேரில் 69 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கு வரும் 11, 18 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பும், வரும் 18, 19 தேதிகளில் நேர்காணலும் நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு உரிய அழைப்புக் கடிதம் தனித்தனியாக விரைவு அஞ்சல், மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன என்று தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment