Tuesday 9 September 2014

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மும்பை துறைமுகத்தில் டிரேட்ஸ்மென் பணி

மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள டிரேட்ஸ்மென் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Naval Dockyard Mumbai
காலியிடங்கள் எண்ணிக்கை: 548
பணி: Tradesman Mate (erstwhile MTS (Industrial))
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1 எஸ்சி - 63
2 எஸ்டி - 29
3 ஓ.பி.சி - 137
4 பொது - 319
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,  உடல் திறன் சோதனை, ஆவணம் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.godiwadabhartee.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.09.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கமும் முழுமையான விவரங்களும் அறிய http://godiwadabhartee.com/index.php/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment