Monday 8 September 2014

தில்லி எஸ்எஸ்பி -யில் மருத்துவ அதிகாரி பணி

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா சீமா பால் மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள 34 மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சர்ஜன், ரோடியோலாஜிஸ்ட், அனஸ்தெஸிஸ்ட் போன்ற 34 பணிகள்
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் மருத்துவப் படிப்பை படித்திருப்பதோடு போதிய அனுபவம் பெற்றிருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment