Wednesday 10 September 2014

விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்கள்: தபால் துறை அறிவிப்பு

தபால் துறையில் காலியாக உள்ள பல்வேறுப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக தபால் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தபால் அலுவலகக் கோட்டங்கள், தபால் பிரிப்பகக் கோட்டங்கள், யூனிட்டுகள், இதர தபால் அலுவலகங்களில் உள்ள தபால் உதவியாளர், தபால் பிரிப்பக உதவியாளர், தபால்காரர், பல்வினைப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். தபால் அலுவலகக் கோட்டங்கள், தபால் பிரிப்பகக் கோட்டங்கள், யூனிட்டுகள், இதர தபால் அலுவலகங்களின் முழு விவரம், காலி இடங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தர ஊதியம், விண்ணப்பப் படிவங்கள் போன்ற விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ல்ர்ள்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் அதிலிலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை, பணியிடங்கள் காலியாக உள்ள சம்பந்தப்பட்ட தபால் கோட்ட அலுவலகத்திற்கோ, பிற தபால் சார் அலுவலகங்களுக்கோ மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment