Saturday 20 September 2014

டிப்ளமோ முடித்தவர்களுக்கு விமானப்படையில் பயிற்சியுடன் பணி

இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ், குரூப் ஒய் என இரு பிரிவுகளில் பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்ப டிப்ளமோ முடித்த, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஏர்மேன்
கல்வித்தகுதி:  50 சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல், ஆங்கிலப் பாடங்களில் +2 தேர்ச்சி பெற்று மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குரூப் ஒய் பிரிவுக்கு பணிக்கு +2 தேர்ச்சியுடன் 2 வருட ஐடிஐ முடித்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதி: உயரம் 152.3 செ.மீட்டரும், மார்பளவு விரிந்த நிலையில் 5 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், பயிற்சிக்காலம், உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment